மனம் மிக அலை பாயுதே....

மகாபாரதத்தில், கதையை நகர்த்துவதற்கு பெரிதும் உதவிய ஒரு கதாபாத்திரம் ‘திருதராஷ்டிரன்’. மிக முக்கியமான முடிவுகள் அவன் மூலமாகவே எடுக்கப்படுகின்றன; ஏனென்றால் அவன் அஸ்தினாபுரத்து அரசன்.... திருதராஷ்டிரனை, ’நல்லவன்’ என்பதா, இல்லை ‘கெட்டவன்’ என்பதா? முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அவன் (He is a bundle of contradictions).

நல்ல எண்ணங்கள் அவ்வப்போது வந்து போகும் ஒரு கெட்ட எண்ணம் படைத்தவன். ஒரு பக்கம் அவனது மனசாட்சி போன்று விளங்கும் அவன் சகோதரன் ‘விதுரன்’; மறுபக்கம் தீய எண்ணங்களின் மொத்த உருவமான அவனது மகன் ’துரியோதனன்’. விதுரன் கூறும் அறிவுரைகளை விரும்பிக் கேட்டும், அதன்படி நடக்க முடியாமல், துரியோதனன் மீதுள்ள அதீத பாசத்தினால், கெட்ட செயல்களுக்கு அனுமதி கொடுத்தவன். ஒரு கடிகாரத்தின் ‘ஊசல்’ (pendulum) போன்றவன். ஆனால், எப்போதும், துரியோதனன் பக்கம் மட்டுமே சாய்பவன்.

அவன் நினைத்திருந்தால், ‘சூதாட்டம்’ நடக்காமல் தடுத்திருக்கலாம். அதன் விளைவாக பாண்டவர்கள் 13 வருடங்கள் ‘வனவாசம்’ சென்றதைத் தவிர்த்திருக்கலாம். பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பியவுடன், அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கினைக் கொடுத்திருந்தால், ‘குருக்ஷேத்திரப் போரையே’ தவிர்த்திருக்கலாம். அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கினை கொடுக்கக் கூடாது என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்த போது, அதற்குச் சம்மதித்தவன். அவனது குலம் அழிவதற்குக் காரணமாக இருந்தவன் துரியோதனன் என்றால், அதற்கு மூல காரணம் திருதராஷ்டிரன்.

இந்த நிகழ்வு, நமக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய வாழ்க்கைப் பாடம். நாம் எப்போதும், நமக்கு நல்லதையே சொல்லக்கூடிய நண்பர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் (தீய நண்பர்களை ஒதுக்கி விட வேண்டும்). அடுத்து நமது நன்மையையே பிரதானமாக நினைக்கும் நமது ‘மனசாட்சியை’ (அதாவது உள்ளுணர்வை) மதித்து, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.

மனம் என்றுமே அலைபாயக்கூடியதுதான். அதற்குக் கடிவாளம் நம் கையில்தான் இருக்கிறது. அதைச் சரியான பாதையில் செல்ல அனுமதிப்பது நமது கையில் தான் இருக்கிறது. இது ஒன்றும் எளிய காரியம் இல்லை. தொடர்ந்து பயிற்சி, மற்றும் இடைவிடாத முயற்சி இருந்தால் மட்டுமே, மனம் அலைபாய்வதைத் தடுக்க முடியும். நம் உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்று கேட்டு, அதன் பலாபலனைச் சீர்தூக்கிப் பார்த்து, அதன்படி செயலாற்ற வேண்டும். நாம் தான் எப்போதுமே அதற்கு எஜமானனாக இருக்க வேண்டும். அதன் கடிவாளத்தை நம் கையில் பிடித்து, அதைச் சரியான முறையில் வழிநடத்தினால் வாழ்வில் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

Comments

  1. Best Casinos In Asia - ChoGiocasino
    ChoGiocasino 온라인 카지노 is an award-winning online casino and betting company that is currently based in Malta, Bulgaria, Turkey and Cyprus.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?